Win Tv

குமார் சங்கக்கார பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை…

தனது பெயர் மற்றும் உருவத்தைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட முதலீட்டு மோசடிகள் குறித்து இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார மீண்டும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ள அவர், தனது பழைய நேர்காணல்களைக் கொண்டு, AI தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட (Doctored Videos) காணொளிகள் முதலீட்டுத் தளங்களை விளம்பரப்படுத்தப் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.”எனது பெயரும் உருவமும் போலியான AI காணொளிகளில் பயன்படுத்தப்படுகின்றன,…

Read More

தாய்நாட்டின் மீதான உண்மையான பற்று பெண்களை மதிப்பதிலேயே உள்ளது – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு…

பெண்களையும் தாய்மார்களையும் மதிக்காத ஒரு சமூகம், தாய்நாட்டின் மீது உண்மையான அன்பையோ மரியாதையையோ கட்டியெழுப்ப முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாத்தளையில் நேற்று (08) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பெண்களின் தியாகங்கள் மற்றும் ஆசீர்வாதங்களின் மேலேயே இந்த நாடு கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளால் ஏற்படும் சவால்களைப் பெண்களே முதலில் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, வாழ்க்கைச் செலவு…

Read More

AI-ஆல் வேலைக்கு ஆபத்தா? தப்பிக்கும் 30% தொழிலாளர்கள் யார்? – ஆய்வில் தகவல்..

அமெரிக்காவில் இதுவரை வேலைவாய்ப்பின்மை விகிதத்தில் பாரிய அதிகரிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், குறிப்பிட்ட சில துறைகளில் புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் வேகம் குறைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.இந்த ஆய்வானது “அவதானிக்கப்பட்ட வெளிப்பாடு” என்ற புதிய அளவீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.இது AI-இன் தத்துவார்த்தத் திறனை (Theoretical capability) மட்டும் கணக்கில் கொள்ளாமல், நிஜ உலகில் அலுவலகப் பணிகளில் AI எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்ற தரவுகளையும் இணைத்து மதிப்பீடு செய்கின்றது.இந்த அளவீட்டின்படி, குறிப்பிட்ட சில பணிகளில் AI-இன் தாக்கம் மிக…

Read More

மூன்றாவது ஈரானியப் போர்க்கப்பல் இந்தியாவில் தஞ்சம்!….

இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகில் ஈரானியப் போர்க்கப்பலான ஐரிஸ் டெனா அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னரே, மற்றுமொரு ஈரானியப் போர்க்கப்பல் இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு இந்திய அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன் மூலம், அண்மைய நாட்களில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் தீவிரமான கடல்சார் சம்பவங்களுடன் ஈரானின் மூன்று போர்க்கப்பல்கள் தொடர்புபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்திய அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள தகவல்களின்படி, சர்வதேச கடற்படை அணிவகுப்பைத் தொடர்ந்து…

Read More

ஈராக் தலைநகர் பக்தாத் மற்றும் பஸ்ராவில் தொடர் தாக்குதல்கள்: இராணுவ வானூர்தி நிலையத்தில் விழுந்த ஆளில்லா விமானம்…

ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் பஸ்ரா மாகாணங்களில் அடுத்தடுத்து தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.பக்தாத்தில் உள்ள இராணுவ வானூர்தி நிலையத்தில் ஆளில்லா வானூர்தி ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில், அங்குள்ள களஞ்சியசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்தச் சம்பவம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.இதற்கு முன்னதாக, பக்தாத் வானூர்தி நிலையத்திற்கு அருகில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தளவாட ஆதரவு மையத்தை நோக்கி ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பக்தாத்தின்…

Read More

“நீண்டகாலப் போருக்குத் தயார்; இதுவரை பயன்படுத்தாத அதிநவீன ஆயுதங்கள் களமிறக்கப்படும்” – ஈரான் இராணுவம் கடும் எச்சரிக்கை!…

ஈரானியப் புரட்சிகரக் காவல்படை (IRGC), அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு “நீண்டகாலப் போரை” (Prolonged War) எதிர்கொள்ளத் தாம் முழுமையாகத் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து ஈரானியப் புரட்சிகரக் காவல்படையின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் அலி முகமது நைனி (Ali Mohammad Naeini) கூறுகையில்,”ஈரானின் புதிய முன்னெடுப்புகளும் ஆயுதங்களும் தயார் நிலையில் உள்ளன. இந்த இராணுவ மோதலானது ஒரு புனிதமான மற்றும் சட்டபூர்வமான போர் ஆகும்.”ஈரான் இதுவரை எந்தவொரு மோதலிலும் பயன்படுத்தாத அதிநவீன…

Read More

ஈரான் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 204 பேர் கொழும்பு வருகை..

இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள ஐரிஸ் புசேஹெரின் என்ற ஈரானிய கப்பலில் பயணித்தவர்களில் 204 பேர் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.உரிய நடைமுறைகளை பின்பற்றி ஏனையவர்களும் துறைமுகத்துக்கு அழைத்துவரப்படுவதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத், எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ள ஈரானியர்களை, வெலிசர கடற்படை தளத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.அங்கு அவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், ஈரானின் 02…

Read More

ஈரான் விவகாரத்தில் அதிரடி திருப்பம்: அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிராகரிப்பு!..

ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளைத் தன்னிச்சையாகத் தொடர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு இருந்த முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.ஈரானுக்கு எதிரான போரைத் தொடர்வதற்கு நாடாளுமன்றத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 48 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் பதிவாகின. இதன் மூலம் அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.இந்த முடிவின் மூலம், ஈரானுக்கு எதிரான அடுத்தகட்டத் தாக்குதல்கள் அல்லது இராணுவ நகர்வுகளை மேற்கொள்வதற்கு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு…

Read More

உலக எண்ணெய் சந்தைக்குப் பேராபத்து – ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!….

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக எவராவது நுழைய முயன்றால் அவர்கள் மீது “தீவைக்கப்படும்” என ஈரான் உத்தியோகபூர்வமாக எச்சரித்துள்ளது.ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைமை தளபதியின் ஆலோசகர் இப்ராஹிம் ஜப்பாரி, அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் உரையாற்றும் போதே இந்த கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.ஹோர்முஸ் நீரிணை தற்போது மூடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய அவர், விடுத்துள்ள எச்சரிக்கையில் “எந்தவொரு கப்பலும் இந்த பகுதிக்கு வரக்கூடாது. மீறி வந்தால் அவர்கள் எங்களது கடுமையான பதிலடியைச் சந்திக்க நேரிடும்,” என…

Read More

105 ஆண்டு பழமையான விண்டேஜ் டிராக்டர் ரூ.1.25 கோடிக்கு விற்பனை: எப்படி சாத்தியமானது?

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எப்போது, எவ்வாறு வந்து சேரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதற்கான ஒரு சுவாரஸ்யமான உதாரணம் பஞ்சாபின் Jalandhar நகரில் நடந்துள்ளது. பல ஆண்டுகளாக பாழடைந்த கட்டிடத்தின் முன்பு தூசியில் புதைந்து கிடந்த ஒரு பழமையான டிராக்டர் திடீரென சர்வதேச கவனத்தை ஈர்த்து, ரூ.1.25 கோடிக்கு விற்கப்பட்டு அமெரிக்காவின் California மாநிலத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்குச் சென்றுள்ளது.பகத் சிங் சௌக் அருகே கவனிக்கப்படாமல் கிடந்த இந்த 105 ஆண்டு பழமையான டிராக்டர், 1921 ஆம்…

Read More