மூடும் அபாயத்தில் அதரகல்ல பிரதேச மருத்துவமனை: மருத்துவர் இன்றி தவிக்கும் மக்கள் – யானை அச்சுறுத்தலால் மேலும் அவதி!
குருணாகல் மாவட்டத்தின் கல்கமுவ பகுதியில் அமைந்துள்ள அதரகல்ல பிரதேச மருத்துவமனை, போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் தற்போது மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.இந்த மருத்துவமனையில் இரண்டு தங்குமிட விடுதிகள் இருந்தபோதிலும், தற்போது நோயாளர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை நாட்களில் வெளிநோயாளிப் பிரிவு இயங்காது என அறிவித்தல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இங்கு இரு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருந்த போதிலும், ஒரு மருத்துவர் மகப்பேற்று விடுமுறையில் சென்றுள்ளார். தற்போது இருக்கும்…
