ஜிந்துபிட்டி துப்பாக்கிச்சூட்டின் திடுக்கிடும் தகவல்

கொட்டாஞ்சேனை, ஜிந்துபிட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு (14) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது, ‘ரணசிங்க ஆராச்சிகே சங்க ஷிரந்த’ எனப்படும் ‘புளூமெண்டல் சங்க’ என்பவரின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.முன்னதாக ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.உந்துருளியில் வந்த சந்தேகநபர்கள் டி56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச்சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.சிகையலங்கார நிலையம் ஒன்றை இலக்கு வைத்தே…

Read More

சாதாரண தரப் பரீட்சார்த்திகள் கவனத்திற்கு!

சாதாரண தரப் பரீட்சை காலத்தில் மழை பெய்யலாம் என்பதால், அபாய நிலையிலுள்ள பாடசாலைகள் குறித்த தகவல்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.மோசமான வானிலை காலத்தில் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய, பாடசாலைகள் செயல்பட வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.அதன்படி, பாடசாலைகள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் குறித்து வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத்…

Read More

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது….

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 4 இலட்சத்த ஆயிரத்து 787 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.குறித்த காலப்பகுதியில், ஒரே நாளில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகை பெப்ரவரி 12 ஆம் திகதி வருகை தந்துள்ளனர்.அதன்படி குறித்த திகதியில் 12 ஆயிரத்து 731…

Read More

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் கியூபாவின் புகழ்பெற்ற ‘சிகர் திருவிழா’ ஒத்திவைப்பு…

அமெரிக்காவின் கடுமையான எரிபொருள் முடக்கல் மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக, கியூபாவின் தலைநகர் ஹவானாவில் நடைபெறவிருந்த புகழ்பெற்ற ‘ஹபானோ சிகர் திருவிழா’ (Festival del Habano) காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பெப்ரவரி மாத இறுதியில் ஐந்து நாட்கள் நடைபெறவிருந்த இந்தச் சர்வதேசத் திருவிழா, கியூபா எதிர்கொண்டுள்ள “சிக்கலான பொருளாதாரச் சூழல்” காரணமாக நிறுத்தப்படுவதாக விழா ஏற்பாட்டுக் குழு சனிக்கிழமை அறிவித்தது.கியூபாவின் நீண்டகால நட்பு நாடான வெனிசுவேலாவிலிருந்து வரும் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதால், குறித்த நாடு முழுவதும் கடுமையான…

Read More

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை….

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அதன்படி, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.மேலும், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.அத்தோடு, மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி,…

Read More

உரிமையாளருக்காக 10 வருடம் கல்லறையில் காத்திருந்த நாய் – நாயின் அன்பு உருவாக்கிய புதிய சட்டம்….

பிரேசிலில் தனது உரிமையாளரின் கல்லறையிலேயே 10 வருடங்களாக வாழ்ந்து வந்த ‘பொப்’ (Bob) என்ற நாயின் விசுவாசத்தால் கவரப்பட்ட அந்நாட்டு அரசாங்கம், செல்லப் பிராணிகளை உரிமையாளர்களின் குடும்பக் கல்லறைகளிலேயே அடக்கம் செய்ய அனுமதிக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.பிரேசிலின் சாவ் பாலோ (São Paulo) மாகாணத்தில் தனது உரிமையாளர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலேயே 10 வருடங்களாக வாழ்ந்து வந்த ‘பொப்’ என்ற நாயின் நினைவாகப் பெயரிடப்பட்ட புதிய சட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளது.உரிமையாளரின் இறுதிச் சடங்கின்…

Read More

செயற்கை நுண்ணறிவால் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விழுந்த பேரடி…

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக, இந்தியாவின் முன்னனி தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களின் பங்குச் சந்தை பெறுமதி பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது.நிஃப்டி ஐடி பங்குகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளன. தற்போது பயன்பாட்டிலுள்ள கூகுள் ஜெமினி, ஓபன் ஏஐ சாட்ஜிபிடி, டீப்சீக் போன்ற பல்வேறு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை நிறுவனங்கள் தமது பணிகளுக்காகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.இதனால், ஏற்கனவே மனிதர்களால் முன்னெடுக்கப்பட்ட பல தொழில்நுட்ப வேலைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இவ்வாண்டில்…

Read More

இராஜகிரியவில் இளைஞன் மீது மண்வெட்டித் தாக்குதல்..

கொழும்பின் புறநகர்ப் பகுதியான இராஜகிரியவில், இளைஞன் ஒருவரை மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளை ஆதாரமாகக் கொண்டு இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில், வெலிக்கடை காவல் நிலையத்தில் கடந்த 09 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சம்பவம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Read More

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி…

வட்ஸ்அப் நிறுவனம் தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில், மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்யாமலேயே நேரடியாக இணைய உலாவிகள் (Browsers) வழியாக குரல் மற்றும் காணொளி அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதுவரை கணினி செயலிகளில் (Desktop App) மட்டுமே சாத்தியமாக இருந்த இந்த அம்சம், தற்போது பயனர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் விண்டோஸ் அல்லது மெக் செயலிகளைப் பயன்படுத்தாத லினக்ஸ் போன்ற இயங்குதளப் பயனர்களும், உலாவிகள் மூலமாகவே தடையின்றி அழைப்புகளை மேற்கொள்ள முடியும்…

Read More

பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் AI காணொளியை பதிவிட்டால் இது கட்டாயம் – மீறினால் கடும் நடவடிக்கை…

இந்தியாவில் சமூக ஊடக தளங்களில் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளடக்கங்களுக்கான விதிகளை இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சு அண்மையில் மாற்றியமைத்துள்ளது. இணையப் பயன்பாட்டில் டீப்ஃபேக் மற்றும் ஏனைய முறைகேடுகளைத் தடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.புதிய விதிகளின்படி, அதிகாரிகளால் சட்டவிரோதம் என அடையாளம் காணப்பட்டு அகற்றக் கோரப்படும் உள்ளடக்கங்களை வெறும் 3 மணிநேரத்திற்குள் சமூக ஊடக தளங்கள் நீக்க வேண்டும்.இதற்கு முன்னர் இந்த நடவடிக்கைக்கு 36 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான…

Read More