அமெரிக்காவுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை – ஈரான் தெரிவிப்பு!

ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லரிஜானி அமெரிக்க ஊடகங்களில் வெளியான தகவல்களை மறுத்துள்ளார். அமெரிக்காவுடன் அணு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க புதிய முயற்சி மேற்கொண்டதாக வெளியான செய்தி தவறானது என அவர் தெரிவித்துள்ளார்.“நாங்கள் அமெரிக்காவுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட மாட்டோம்,” என்று அவர் தனது X சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு முன் The Wall Street Journal வெளியிட்ட செய்தியில், ஈரான் உயர் தலைவர் Ali Khamenei கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஓமான் நடுவர் முயற்சியின் மூலம் வாஷிங்டனுடன் அணு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அலி லரிஜானி முயன்றதாக கூறப்பட்டது.ஆனால் இவ்வாறான தகவல்களை அலி லரிஜானி தெளிவாக மறுத்துள்ளதால், ஈரான்-அமெரிக்க உறவுகள் குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *