பெண்களுக்கு ஒரு நற்செய்தி! – மாதவிடாய் இரத்தத்தின் மூலம் புற்றுநோய் பரிசோதனை: மருத்துவ உலகில் புதிய புரட்சி…

கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய மாதவிடாய் இரத்தத்தைப் பரிசோதிக்கும் புதிய முறை, மிகவும் துல்லியமான மற்றும் எளிதான வழியாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போதைய சவால் என்ன?தற்போது நடைமுறையில் உள்ள ‘பாப் ஸ்மியர்’ (Pap smear) அல்லது என்.எச்.எஸ் (NHS) சோதனையில், மருத்துவர் அல்லது தாதியர் மூலம் கருப்பை வாயிலிருந்து செல்கள் சேகரிக்கப்படுகின்றன.ஆனால், வலி, கூச்சம் மற்றும் அசௌகரியம் காரணமாக மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இந்தப் பரிசோதனைக்குச் செல்வதில்லை.குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் மற்றும் பாலியல் வன்முறையால்…

Read More

டி20 உலகக்கிண்ணம் 2026: கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்

Messenger 2026 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் நாளை (7) ஆரம்பமாகி எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், கொழும்பு ஆர். பிரேமதாச மற்றும் எஸ்.எஸ்.சி (SSC) மைதானங்களைச் சுற்றி விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.இதற்காக 1,500 காவல்துறை அதிகாரிகளும் 600 போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, மைதானத்தினுள் பெரிய பைகள், கண்ணாடி போத்தல்கள், ட்ரோன்கள், கூர்மையான பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள்…

Read More

இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல்? : குற்றச்சாட்டுகளை உத்தியோகபூர்வமாக மறுத்தது இந்திய உயர்ஸ்தானிகராலயம்…

கடந்த ஜனவரி 29 ஆம் திகதி கடலில் வைத்து இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்தியக் கடற்படையினர் அல்லது கடலோரக் காவல் படையினர் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது.இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், இக்குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.அத்துடன், கடற்றொழிலாளர்கள் விவகாரத்தில் இந்தியா எப்போதும் மனிதாபிமான அணுகுமுறையையே கடைப்பிடித்து வருவதாகவும் உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.பாதுகாப்பு மற்றும் கடற்றொழிலாளர்களின் நலன் சார்ந்து இலங்கை அரசாங்கத்துடன் தாம் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும்,…

Read More

இலங்கையில் இரண்டு ஆண்டுகளில் 47 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதா? – காரணம் என்ன?

இலங்கையின் மொத்த அரச பாடசாலைகளின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு சிறிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.2023 ஆம் ஆண்டில் 10,096 ஆக இருந்த பாடசாலைகளின் எண்ணிக்கை, 2024 இல் 10,076 ஆகவும், 2025 ஆம் ஆண்டு தரவுகளின்படி 10,047 ஆகவும் குறைந்துள்ளது.இது 2023 முதல் 2025 வரையான காலப்பகுதியில் சுமார் 0.49 சதவீத ஒட்டுமொத்த வீழ்ச்சியாகும்.தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கைகளின் (2023-2025) தரவுகளின் அடிப்படையில், கடந்த மூன்று ஆண்டுகளில் அரச பாடசாலைகளின்…

Read More

ட்ரம்ப்பை மிஞ்சிய மனைவியின் செல்வாக்கு – யாருக்கு முதலிடம்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோரின் மக்கள் செல்வாக்கு குறித்த புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள் வௌியாகியுள்ளன. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளில் இருவருக்கும் இடையிலான மக்கள் விருப்பம் மற்றும் எதிர்ப்பு நிலையில் சுவாரசியமான வேறுபாடுகள் காணப்படுகின்றன.ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நடத்தப்பட்ட தனித்தனி கருத்துக் கணிப்புகளின்படி, டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவருக்கும் தலா 41 வீதமான மக்கள் விருப்பம் (Favorable)…

Read More

தாய் கண்முன்னே நேர்ந்த கொடூரம் : ஒட்டுசுட்டானில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு….

Messengerமுல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், புளியங்குளம் அலகரை பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில், குறித்த பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவனே உயிரிழந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.குறித்த சிறுவன் தமது தாயாருடன் புல் வெட்டுவதற்காகச் சென்றபோது அந்தப் பகுதியில் யானைக்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.சிறுவனின் உடலம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read More

78ஆவது சுதந்திர தினம் : 9,158 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு….

இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் 9,158 ஏனைய தரநிலை (Other Ranks) வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படைகளின் கௌரவத்தை மேம்படுத்தும் வகையிலும், இராணுவத்தினரின் நீண்டகால சேவையை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் காவல்துறை மற்றும் முப்படையினர் இணைந்து விசேட பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இன்று சந்திப்பு..

பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளது.தங்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குமாறு கோரி, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஒன்பது நாட்களாக தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 7 பேர், உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், ஜனாதிபதியுடன் இன்று கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த கலந்துரையாடலின் ஊடாக தமக்கு நியாயாமான தீர்வை ஜனாதிபதி வழங்குவார் என நம்பிக்கை உள்ளதென,…

Read More

முல்லைத்தீவில் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் ஒருவருக்கு மரண தண்டனை…

முல்லைத்தீவில் கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்பளிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு – குரவில் கிராமத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு மாசி மாதம் 11ஆம் திகதி இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது.இதன்போது, 19 வயது இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட பூர்வாங்க விசாரணைகளின் பின்னர், கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில்…

Read More

வீதியோரம் நடந்து சென்ற சிறுவர்கள் மீது பாரவூர்தி மோதி விபத்து: 13 வயது சிறுவன் பலி…

சிலாபம் – குருநாகல் வீதியின் மேல் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிங்கிரிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (01) பிற்பகல் சிலாபம் நோக்கிச் சென்ற பாரவூர்தி ஒன்று, வீதியோரத்தில் நடந்து சென்ற இரண்டு சிறுவர்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இரண்டு சிறுவர்களும் உடனடியாக சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், சிகிச்சை பெற்று வந்த சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஹல்மில்லேவ பகுதியைச்…

Read More