சந்தையில் எகிறியது மீன்களின் விலை!….

கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் சத்தியாகிரக போராட்டம் காரணமாக, சந்தையில் மீன்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி கடந்த 8 நாட்களாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.இந்தநிலையில், சந்தைக்கு வரும் மீன்களின் அளவு குறைவடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.இதன் விளைவாக மீன்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் ஓரளவு உயர்ந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.அதற்கமைய, பேலியகொடை மீன் சந்தையில் தோரா மீன் மூவாயிரத்து…

Read More

மின்சார வாகன உலகில் ஜாகுவாரின் மாபெரும் பாய்ச்சல் – 700 கி.மீ மைலேஜ் தரும் புதிய சொகுசு சிற்றூந்து…

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) வாகனங்களை, தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் உள்ள புதிய தொழிற்சாலையில் நேற்று (பிப்ரவரி 9) முதல் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.சுமார் 9,000 கோடி ரூபாய் முதலீட்டில், 470 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பசுமைத் தொழிற்சாலை (Greenfield Plant), வருடத்திற்கு 2.5 இலட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.இந்தத் தொழிற்சாலையிலிருந்து முதன்முதலாக Range Rover Evoque சிற்றூந்து இன்று வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டது….

Read More

பாலில் சலவைத்தூள் கலந்து கலப்படம்…

கடந்த ஐந்து ஆண்டுகளாக இரசாயனங்களை கலந்து இரகசியமாக ‘செயற்கை பால்’ தயாரித்து வந்த தொழிற்சாலையை குஜராத் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கலப்பட பால் தயாரிக்கப்பட்டு அருகில் உள்ள நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் விநியோகிக்கப்படுவதாகக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைக்குழு இன்று (08) சோதனை நடத்தியது.மிகக் குறைந்த அளவு பாலுடன் யூரியா மற்றும் பதப்படுத்தப்பட்ட பொடிகளைக் கலந்து இந்த போலி பால் தயாரிக்கப்பட்டுள்ளது.பாலின் நிறம்,…

Read More

வடக்கு, கிழக்கு மக்களில் அக்கறை செலுத்தும் நாமல்…

வடக்கு, கிழக்கு மக்களுக்காக, மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவிக்கின்றார்.கம்பஹா – திஹாரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.மாகாண சபை தேர்தலை நடத்தி, வடக்கு மக்களுக்கான அதிகாரத்தை வழங்க, அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச இதன்போது கூறியுள்ளார்.இந்தநிலையில் நாட்டில் அடுத்து நடத்தப்படவுள்ள எந்தவொரு தேர்தலையும் சந்திப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக…

Read More

இன்று முதல் வானிலையில் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட முக்கிய தகவல்!

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த மழையுடனான வானிலை இன்று (08) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தற்காலிகமாகக் குறையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.எதிர்வரும் நாட்களில் ஊவா மாகாணம், மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்.மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.மத்திய மலைநாட்டின்…

Read More

டிட்வாவினால் பெற்றோரை இழந்த 103 சிறுவர்கள் – கரம் கொடுக்கும் அரசாங்கம்….

டிட்வா சூறாவளியினால், 103 சிறுவர்கள் தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.குறித்த சிறுவர்களைப் பராமரிப்பதற்கும் அவர்களின் எதிர்காலப் பாதுகாப்புக்கும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.பெற்றோரை இழந்த சிறுவர்களைப் பொறுப்பேற்கப் பலர் முன்வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.அதன்படி, முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சாவித்ரி போல்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Read More

இலவங்கப்பட்டையினால் இலங்கைக்குக் கோடிகளில் வருமானம்……

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 8 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்ட முடிந்ததாக, இலவங்கப்பட்டை அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை அடைவதற்குத் தமது நிறுவனம் எதிர்பார்ப்பதாக அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனக லிந்தர தெரிவித்தார்.இவற்றில், இலவங்கப்பட்டை சுருள்களே அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் 251 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஏனைய வருமானம் இலவங்கப்பட்டை பட்டை, இலைகள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின்…

Read More

நீண்டகால குற்றத்தை காட்டிக்கொடுத்த துர்நாற்றம் – சுமார் 200 உடலங்களுடன் 4 ஆண்டுகள் வாழ்ந்த கொடூரம்!…

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் சுமார் 200 உடல்களைச் சிதையவிட்டு, முறைகேடாகக் கையாண்ட விவகாரத்தில் இறுதிச் சடங்கு இல்லத்தின் உரிமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணம், பென்ரோஸ் பகுதியில் ‘ரிட்டர்ன் டு நேச்சர்’ (Return to Nature) என்ற பெயரில் இறுதிச் சடங்கு இல்லத்தை ஜோன் ஹால்போர்ட் மற்றும் அவரது முன்னாள் மனைவி கேரி ஹோல்போர்ட் நடத்தி வந்தனர்.இயற்கை முறைப்படி (இரசாயனங்கள் இன்றி) உடல்களை அடக்கம் செய்வதாகக் கூறி வந்த இவர்கள், உண்மையில் உடல்களை…

Read More

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய முன்னணி உணவகங்கள்…

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய முன்னணி உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.அதன்படி, கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இரண்டு உணவகங்கள், பழைய பேருந்து நிலையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் மற்றும் வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிற்கு அண்மையில் அமைந்துள்ள முன்னணி உணவகங்களும் மூடப்பட்டுள்ளன.குறித்த உணவங்கள் சுகாதார பரிசோதகர்களால், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, குறித்த உணவகங்களை நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Read More

பழுதடைந்த தனது வாகனத்தை விற்பனை நிலையம் முன்பாகவே தீயிட்டு எரித்த பெண்…

மத்தியப் பிரதேசத்தில் வாழ்வாதாரத்திற்காக வாங்கிய இ-ரிக்‌ஷா அடிக்கடி பழுதானதால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், அதனை விற்பனை செய்த நிறுவனத்தின் முன்னாலேயே தீயிட்டு எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தினக்கூலி வேலையிலிருந்து விடுபட்டு, சுயதொழில் மூலம் முன்னேற வேண்டும் என்ற ஒரு பெண்ணின் கனவு, வீதியில் தீக்கிரையாகி முடிவுக்கு வந்துள்ளது.மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சிவ்புரி, ஃபக்கர் காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான குடியா மஹௌர் மற்றும் அவரது கணவர் நாராயண்…

Read More