70 மில்லியன் ரூபாய்க்கும் அதிக சந்தை மதிப்புள்ள 5 கிலோகிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் காலி, பெந்தர பகுதியில் போதைப்பொருளை விநியோகிக்க முயன்றபோது, ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனையை காவல்துறை முன்னெடுத்திருந்தது. கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காலி – பெந்தர பகுதியில் 70 மில்லியன் ரூபாய் பெறுதியான ஹெராயினுடன் இருவர் கைது…
