ஈரான் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்த நேற்றிரவு ஆலோசனையைத் தொடர்ந்து, பிரதமர் நெதன்யாகு இன்று மதியமும் மற்றொரு பாதுகாப்பு ஆலோசனையை நடத்தினார். ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது இன்னும் உறுதியான ஒன்றாக (Done deal) மாறவில்லை என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கருதுகின்றனர்.அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ அழுத்தத்தின் மூலம் ஒரு உடன்படிக்கையை எட்ட முயற்சிக்கும் “துப்பாக்கிப் படகு இராஜதந்திரத்தை” (Gunboat diplomacy) கடைப்பிடிக்கலாம் என்பதை ஜெருசலேம் (இஸ்ரேல்) நிராகரிக்கவில்லை. அதிகமான இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரிப்பது என்னவென்றால்,”ஆயதுல்லா அலி கொமைனி ஆட்சியின் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொண்டு, அதன் அணுசக்தி திட்டத்தை மட்டும் கட்டுப்படுத்தும் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டால், அது மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய தவறவிடப்பட்ட வாய்ப்பாக அமையும். மேலும், உலக நாடுகள் தங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில், ஆட்சி மாற்றத்திற்காகப் போராடி ஆயிரக்கணக்கான நண்பர்களையும் குடும்பத்தினரையும் இழந்த ஈரானிய மக்களுக்கு இது ஒரு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.”
டிரம்ப் போரைத் தொடங்குவாரா அல்லது ஒப்பந்தம் செய்வாரா? – என்ற குழப்பத்தில் இஸ்ரேலிய அதிகாரிகள்!‼️
