பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உயிரியல் விஞ்ஞானம் போன்ற துறைகளில் உள்ள சர்வதேச நிபுணர்களை ஈர்ப்பதற்காக விசா கட்டணங்களை மீள வழங்கும் புதிய திட்டத்தை ஐக்கிய இராச்சியம் அறிவித்துள்ளது.சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரித்தானிய நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.செயற்கை நுண்ணறிவு, ஆழ்கடல் தொழில்நுட்பம் (Deep Tech) மற்றும் தூய எரிசக்தி போன்ற துறைகளில் பிரித்தானிய நிறுவனங்களில் இணையவரும் நிபுணர்களுக்கான விசா கட்டணங்கள் அரசாங்கத்தினால் மீண்டும் வழங்கப்படும் என தெரிவித்தார்.மேலும், சர்வதேச நிறுவனங்கள் பிரித்தானியாவில் தமது கிளைகளை இலகுவாக விரிவுபடுத்துவதற்காக, அவற்றுக்கான விசா அனுசரணை உரிமங்களை (Sponsor Licenses) விரைவுபடுத்தும் (Fast-track) புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
திறமையாளர்களை ஈர்க்க வலைவீசும் பிரித்தானியா: விசா நடைமுறைகளில் பாரிய தளர்வுகள்…
