AI தொழில்நுட்பத்தினால் நாட்டில் உள்ள 22% பணியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் அபாயம் !!

இலங்கையின் மொத்தப் பணியாளர்களில் 22.8%, அதாவது சுமார் 1.83 மில்லியன் ஊழியர்களின் வேலைப் பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கொள்கை ஆய்வுகள் நிறுவனம் (IPS) மேற்கொண்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.தற்போதுள்ள தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதுடன் மட்டுமன்றி, புதிய உள்ளடக்கங்களை உருவாக்கும் திறன் கொண்ட மேம்பட்ட தொழில்நுட்பக் கருவியாக ‘GenAI’ அடையாளப்படுத்தப்படுகிறது.2023 ஆம் ஆண்டின் தொழிலாளர் படை கணக்கெடுப்புத் தரவுகளைப் பயன்படுத்தி 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, நாட்டின் பல்வேறு தொழில்கள் இதன் மூலம் மாற்றங்களுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுகிறது.இந்த ஆய்வின்படி, GenAI தொழில்நுட்பத்தின் தாக்கத்திற்கு உள்ளாகக்கூடிய ஊழியர்களில் 187,000 க்கும் மேற்பட்டோர் மிக அதிக ஆபத்துள்ள மட்டத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *