நிபா வைரஸ் அச்சுறுத்தல் – தீவிரமடையும் கண்காணிப்பு

மியன்மாரில் இதுவரை நிபா வைரஸ் (Nipah virus) பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படாத போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கண்காணிப்புப் பணிகளை அந்நாட்டு சுகாதார அமைச்சு தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி இது தொடர்பான விசேட சுகாதார ஆலோசனைகளையும் இன்று வெளியிட்டுள்ளது. நிபா வைரஸைப் பரப்பும் முக்கிய காரணியான பழம் தின்னும் வௌவால்கள் மியன்மாரில் அதிகளவில் காணப்படுகின்றன. நிபா வைரஸ் பாதிப்பு அடிக்கடி பதிவாகும் நாடுகளுடன் மியன்மார் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதால், வைரஸ் ஊடுருவும் அபாயம் உள்ளதாகக் கருதப்படுகின்றது. இந்தியாவின் மேற்கு வங்கம்…

Read More

பிறையை தீர்மானிக்கும் இஸ்லாமிய நெறியியல்கொழும்பு பெரியபள்ளிவாசலில் மாநாடு…

பிறை தீர்மானங்களை தெளிவுபடுத்தல் எனும் தொனிப்பொருளில் நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பெரியபள்ளிவாசலில் விசேட மாநாடு நடைபெற்றது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறை குழு என்பன இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் தாஹிர் ரசீன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறை குழு தலைவர் ஹிஷாம் ஃபத்தாஹி நிகழ்வில் முன்னிலை வகித்தார்.ஹாபிழ்.எம்.ஜே.எம். சப்ரி கிராஅத் ஓதியதும் நிகழ்வு ஆரம்பமானது. முஸ்லிம் சமய கலாச்சார…

Read More

USA ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ராட்சத விமான தாங்கி கப்பல் இதுதான் தற்பொழுது மேற்கத்திய ஊடகங்களில் மிக முக்கிய செய்தியாக வலம் வருகிறது.‼️

உண்மையில் இந்த போர்க்கப்பல் என்பது வலுவான போர்க்கப்பல் தான் எப்பொழுது என்றால் 1990 ஆம் ஆண்டுகளில் வளைகுடா யுத்தத்தின் பொழுதும் 2001 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தின் பொழுதும் தான். . காரணம் இந்த போர்க்கப்பல் என்பது 1982 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் ஆகிவிட்டது.. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்த போர்க்கப்பல் ஓய்வு அறிவிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக பிரித்து எடுக்கப்பட்டு விடும் என்னை பொருத்தவரை ஈரானுக்கு எதிரான ஒரு யுத்தம்…

Read More

சிறைச்சாலைகளில் நெருக்கடியை குறைக்க புதிய சிறைச்சாலையை நிர்மாணிக்க நடவடிக்கை….

COLOMBO (News1st) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.2026 ஜனவரி மாதம் அளவில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் இந்த மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள வழக்குகள் தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு வரை சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலுள்ள மேல் நீதிமன்றங்களில் 4289 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த…

Read More

இந்த அரசாங்கம் நாட்டு மக்களை சாதாரணமாக எடுத்துக்கொண்டு செயற்பட்டு வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டை முன்வைத்தார்….

நமது நாட்டிற்கு புதிய அரசியலமைப்பொன்று தேவையாக காணப்படுகின்றது. இதனைச் செய்வதற்கான மக்கள் ஆணையுடன் கூடிய புதிய அரசாங்கம் காணப்படுவதால், சிவில் சமூகத்தின் பல்வேறு தரப்புகள் இதற்கான முன்முயற்சியை எடுக்க ஐக்கிய மக்கள் சக்திக்கும் அழைப்பு விடுத்தன. இது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையில் கூட உள்ளடங்கியிருப்பதால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க முடியும். இதனை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சி தயார். மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பனவற்றின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இந்த விடயம் சேர்க்கப்பட்டுள்ளன…

Read More

ஜோன்ஸ்டன் & அவரது இரண்டு மகன்கள் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்….

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (23) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள்…

Read More

வாழைச்சேனையில் சிக்கினார் போலி மருத்துவர்…

மருத்துவர் போல வேடமணிந்து கடந்த 3 வருடங்களாக சட்டவிரோத மருத்துவ கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் ஒருவரை வாழைச்சேனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட செம்மண் ஓடை பிரதேசத்தில் நபர் ஒருவர் மருத்துவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கிளினிக் ஒன்றை நடத்தி வந்ததாக வாழைச்சேனை காவல்நிலைய உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இவர் மருத்துவர் போன்று உடையணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி, அதனை நம்பவைத்து கடந்த மூன்று வருடங்களாக…

Read More

திறமையாளர்களை ஈர்க்க வலைவீசும் பிரித்தானியா: விசா நடைமுறைகளில் பாரிய தளர்வுகள்

பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உயிரியல் விஞ்ஞானம் போன்ற துறைகளில் உள்ள சர்வதேச நிபுணர்களை ஈர்ப்பதற்காக விசா கட்டணங்களை மீள வழங்கும் புதிய திட்டத்தை ஐக்கிய இராச்சியம் அறிவித்துள்ளது.சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரித்தானிய நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.செயற்கை நுண்ணறிவு, ஆழ்கடல் தொழில்நுட்பம் (Deep Tech) மற்றும் தூய எரிசக்தி…

Read More

டட்லி சிறிசேனாவின் ரோல்ஸ்–ராய்ஸ் வாகனத்தை இறக்குமதி செய்த நபர் தவறான தகவலை வழங்கியதால் 70 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

டட்லி சிறிசேனாவின் ரோல்ஸ்–ராய்ஸ் வாகனத்தை இறக்குமதி செய்த நபருக்கு, தவறான அறிவிப்புக்காக 70 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், மொத்தமாக ரூ. 370 மில்லியன் வரி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ்–ராய்ஸ் வாகனம் Phantom Auto என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சுங்கத் துறை விசாரணையில், அது Phantom Auto EWB (Extended Wheelbase) மாடல் என்பது உறுதி செய்யப்பட்டது என சுங்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன (EconomyNext).இங்கிலாந்தில் Phantom Auto மாடலின் அறிவிக்கப்பட்ட மதிப்பு £417,000 ஆகும்…

Read More

அதிரடி மாற்றம் : ஐரோப்பா மீதான 10% வரி விதிப்பைத் திரும்பப் பெற்றார் ட்ரம்ப்….

ஐரோப்பிய நாடுகள் மீது விதிக்கப்பட இருந்த 10 சதவீத மேலதிக வரி திட்டத்தைக் கைவிடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். முன்னதாக, கிரீன்லாந்தைக் கைப்பற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளின் மீது 10 சதவீத மேலதிக வரி விதிப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதன்படி, கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுக்கும் டென்மார்க், ஸ்வீடன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட எட்டு நாடுகள் மீது எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம்…

Read More