டிட்வா சூறாவளியினால், 103 சிறுவர்கள் தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.குறித்த சிறுவர்களைப் பராமரிப்பதற்கும் அவர்களின் எதிர்காலப் பாதுகாப்புக்கும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.பெற்றோரை இழந்த சிறுவர்களைப் பொறுப்பேற்கப் பலர் முன்வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.அதன்படி, முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சாவித்ரி போல்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
டிட்வாவினால் பெற்றோரை இழந்த 103 சிறுவர்கள் – கரம் கொடுக்கும் அரசாங்கம்….
