கடந்த சில நாட்களாக சந்தையில் அதிகரித்திருந்த மீன்களின் விலைகள் தற்போது குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எனினும், மீன்களைக் கொள்வனவு செய்வதற்காக வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.இது தொடர்பாக பேலியகொட மீன் சந்தையின் தலைவர் ஜயந்த குரே கருத்துத் தெரிவித்திருந்தார்.மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டங்கள் காரணமாகவே கடந்த காலங்களில் சந்தையில் மீன்களின் விலைகள் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தையில் மீன்களின் விலைகள் வீழ்ச்சி….
