முவாசலாத் (Mowasalat – Karwa) நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அதிநவீன வாகனத்தின் பொதுப் பயன்பாட்டு சோதனை ஓட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.எங்கே, எப்போது நடைபெறும்?இடம்: பழைய தோஹா துறைமுகம் (Old Doha Port)திகதி: 2026 ஜனவரி 26, திங்கட்கிழமைநேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரைசாரதி இன்றி இயங்குவது எப்படி?போக்குவரத்து அமைச்சின் மேற்பார்வையில் இயங்கும் இந்த ரோபோ டாக்சி, மனித உதவியின்றி தானாகவே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பு வசதிகள் வியக்கத்தக்கவை:360 டிகிரி பார்வை: வாகனத்தைச் சுற்றியுள்ள அனைத்தையும் அவதானிக்க 11 அதிநவீன கெமராக்கள் உள்ளன.தடை கண்டறிதல்: வீதியிலுள்ள தடைகளை முன்கூட்டியே இனங்காண 4 ரேடார்கள் மற்றும் 4 LiDAR சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.துல்லியமான பயணம்: ஜி.பி.எஸ் மற்றும் நவீன மென்பொருள் மூலம் மிகத் துல்லியமாக இலக்கை சென்றடையும்.நீங்களும் பயணிக்க வேண்டுமா?இந்த சாரதி இல்லாத வாகனத்தில் பயணிக்க விரும்பும் பொதுமக்கள், முவாசலாத் நிறுவனத்தின் இணையத்தளத்தில் உள்ள படிவத்தை நிரப்பி தமக்கான நேரத்தை (Time Slot) ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.Registor online form : https://shorturl.at/M2d30கவனிக்க வேண்டியவை:ஒரே நேரத்தில் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும்.முன்கூட்டியே பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.கத்தாரின் எதிர்கால போக்குவரத்துத் திட்டத்தின் ஒரு அங்கமாக, மனிதத் தவறுகளால் ஏற்படும் விபத்துக்களைக் குறைக்கவும், நுட்பமான பயண அனுபவத்தை வழங்கவும் இந்த ‘ரோபோ டாக்சி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கத்தாரில் போக்குவரத்துத் துறையின் புதிய புரட்சியாகக் கருதப்படும் ‘சாரதி இல்லாத ரோபோ டாக்சி’ (Driverless Robotaxi) சேவையை பொதுமக்கள் நேரில் அனுபவிப்பதற்கான விசேட வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
